Posts

Showing posts with the label Indian Polity

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 9

Image
9     கொஞ்சம் பெரிய இடைவெளியாகிவிட்டது, வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த பகுதியில் அடிப்படை உரிமைகளை பற்றி பார்க்கப்போகிறோம். "அடிப்படை உரிமைகள்" என்றால் நமக்கு மட்டும் அடிப்படையானவை அல்ல நம் அரசியலமைப்பின் அடிநாதமே இதன் மீது தான் கட்டியெழுப்பட்டுள்ளது. இதன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்  அல்லது அடிப்படை உரிமைகள் மீறப்படுவது என்பது மக்களாட்சி தத்துவத்தையும் இந்திய அரசியலமைப்பையும் சிதைக்கும் முயற்சிகவே பார்க்க முடியும்.       அரசியலமைப்பு சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி விவரிக்கின்றன. அரசியலமைப்பு உருவான போது ஏழு அடிப்படை உரிமைகள் இருந்தன, அவை பின்வருமாறு, சம உரிமை  சுதந்திரத்திற்கான உரிமை  சுரண்டலை தடுப்பதற்கான உரிமை  சமயச் சுதந்திர உரிமை  பண்பாடு, கல்வி பற்றிய உரிமைகள் குறித்த சில சட்டங்களுக்கான பாதுகாப்பு உரிமை  சட்டத்தீர்வுகளுக்கான உரிமை  விதவிதமாய் வித்தியாசமாய்    என்னதான் அரசியலமைப்பின் அடிநாதமாக அடிப்படை உரிமைகள் இருந்தாலும், அவற்றிற்கும் சில குறைகள் உள்ளன.  சில அடிப்படை உர...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 8

Image
     நாம் அனைவரும் யார்? இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளித்துவிட்டால் நீங்கள் ஒரு வட்டத்துக்குள் சுருங்கி விட்டீர்கள் என்றே அர்த்தம். அறிவியலின் பார்வையில் நாம் மனிதர்கள் ஆனால் மனிதர்களின் பார்வையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர், தமிழர், இந்த மதத்தவர், இந்த சாதியை சேர்ந்தவர் என வகை பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. முகப்புரை "இந்திய மக்களாகிய நாம்" என்று நம் அனைவரையும் இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வருகிறது. நாம் இந்தியர்கள் தான என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை கூறுகிறது. முதலில் ஒரு நாட்டில் வாழும் மக்களை அந்நாட்டின் குடிமக்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏன் உருவானது? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டத்திட்டமும், அந்நாட்டு மக்களுக்கான சலுகைகளும் உண்டு. அது அந்நாட்டின் குடிமக்களுக்காக மட்டுமே வழங்கப்படும் உரிமைகள், அதை மற்றவர் அனுபவிக்க முடியாது. உதாரணமாக இந்திய அரசியலமைப்பு இந்தியர்களுக்கு என்று சில சிறப்பு உரிமைகளை வழங்குகிறது. அவை சட்டப்பிரிவு 15(பாகுபாடு இல்லாமை),  சட்டப்பிரிவு 16(சமவாய...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 7

Image
7 நான்கு சம்பவங்கள்:  1) 2014ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி, தெலுங்கானா இந்தியாவின் 28வது மாநிலமாக உதயமானது.  2) 2019 சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. 3) ஜனவரி 26, 2020இல் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியும், டாமன் மற்றும் தையு என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. 4) கடைசி சம்பவம் கடந்த வருடம் நடந்த ஜி 20 மாநாட்டில் "இந்தியாவின் பிரதமர்" என்று அழைப்பதற்கு பதிலாக "பாரதத்தின் பிரதமர்" என்று அழைக்கப்பட்டது. இதெல்லாம் எப்படி நடைபெற்றது யார் அதிகாரம் கொடுத்தார்கள் போன்ற விஷயங்களை தான் இந்த அத்தியாயத்தில் பார்க்க போகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்றிலிருந்து நான்கு வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் நிலவரையறை பற்றி கூறுகிறது. சட்டப்பிரிவு 1: " இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்"  இந்த சொல்லாடல் மிகவும் முக்கியம். காரணம் ஒன்றியம்(Union) என்பதற்கும் கூட்டாட்சி(Federation) என்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்திய ஒன்றியத்தில் இருந்து எந்த மாநிலங்களும் பிரிந்து செல்ல இயலாத...