Posts

Showing posts from April, 2025

காகித அன்பு

Image
அ ந்த பிரபலம் இல்லாத பத்திரிகையில் “பேனா பக்கிரி” என்ற அடைமொழியில் எழுதிக்கொண்டு இருந்தான் மாறன். சில ஆயிரங்களில் தான் சம்பளம் என்றாலும், ஏனோ அந்த எழுத்துக்கள் அவனுக்கு ஒரு நிறைவை கொடுத்துக்கொண்டு இருந்தன. பேனா பக்கிரி எழுதிய 70% சதவீத கதைகள் நல்ல கதைகள் ரகம் தான். இவன் கதைகளால் பத்திரிகை விற்கிறதா? அல்லது பத்திரிகை விற்பதால் இவனுக்கு கதை எழுத வாய்ப்பு வருகிறதா என்பது புரியாத புதிர். “வாசகர்கள் குறைந்துகொண்டே இருக்கிறார்கள்” என்று பத்திரிகையின் ஆசிரியர் சொன்னது ஞாபகம் வந்தது. ரீல்ஸ், ஷார்ட்ஸ், டிக் டாக் என்று இன்று வேகமாக தகவல்களை மூளைக்குள் திணித்துக்கொண்டு ஒடும், இன்றைய தலைமுறைக்கு கொஞ்சமும் ஒட்டாத நிலையில் இருந்தான் மாறன். கதைகளை ஏதோ என்று எழுதுவதோ அல்லது “இன்ஸ்பிரேஷன்” என்றுக் கூறிக்கொண்டு ஒரே விஷயத்தை வேறு ஒன்றாக உருட்டி தருவதோ, அவனிடம் கிடையாது. அத்தனையும் சொந்த சரக்கு. ஆர்வமும் திறமையும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இயங்கும் பல லட்சம் இளைஞர்களை போலத்தான் மாறனும், "என்றாவது ஒரு நாள் தன் வாழ்க்கை மாறும், அதுவரை ஓடுவோம்" என்ற நம்பிக்கையில் ஒடிக்கொண்டு இருப்பவன்...