சரியான நேரம்
சரியான நேரம் அந்த பீரியட் முடிந்து ஸ்டாஃப் ரூமில் வந்து அமர்ந்தாள் மீரா. முகம் வாடிப் போயிருந்தது, வெயில் ஒரு பக்கம், இந்த பசங்களுக்கு பாடம் எடுக்குறது ஒரு பக்கம். அங்கிருந்த மேசை மீது தலை சாய்த்து படுத்துவிட்டாள். ஸ்டாஃப் ரூமில் இருந்தவர்கள் அவர் அவர்கள் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தனர், வகுப்புகள் முடிந்தவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தனர். "என்ன மீரா தூங்கிட்டு இருக்க" என்று சீண்டினாள், பாக்கியம் மேடம். பாக்கியம் என்பது அவருடைய பெயர், அறிவியல் ஆசிரியை, மற்றும் கொஞ்சம் சீனியர் என்பதால் "மேடம்" பெயரோடு ஒட்டிக் கொண்டது. "சின்ன புள்ளைங்க நல்ல பிரிஸ்கா இருக்க வேணாமா ?" என்று மறுபடியும் சீண்டினாள். காரணம், விளக்கம் எல்லாம் சொல்லி அவர்களிடம் தன் நிலையை சொல்ல அவளுக்கு தோன்றவில்லை விருப்பமும் இல்லை, "ஆமாம் நான் லூசு தான்" என்று வடிவேலு பாணியில் பேச்சை முடிப்பதற்காக "ஒடம்பு சரியில்லை மேடம்" என்று சொல்லி மறுபடியும் படுத்துக்கொண்டாள். இதற்கு மேல் எதுவும் பேசாமல் பாக்கியம் மேடம் அவர் இருக்கைக்கு சென்றுவிட்டாள். மீராவிற்கு இது தான் முதல் வேலை...


Comments
Post a Comment