Posts

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 8

Image
     நாம் அனைவரும் யார்? இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளித்துவிட்டால் நீங்கள் ஒரு வட்டத்துக்குள் சுருங்கி விட்டீர்கள் என்றே அர்த்தம். அறிவியலின் பார்வையில் நாம் மனிதர்கள் ஆனால் மனிதர்களின் பார்வையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர், தமிழர், இந்த மதத்தவர், இந்த சாதியை சேர்ந்தவர் என வகை பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. முகப்புரை "இந்திய மக்களாகிய நாம்" என்று நம் அனைவரையும் இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வருகிறது. நாம் இந்தியர்கள் தான என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை கூறுகிறது. முதலில் ஒரு நாட்டில் வாழும் மக்களை அந்நாட்டின் குடிமக்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏன் உருவானது? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டத்திட்டமும், அந்நாட்டு மக்களுக்கான சலுகைகளும் உண்டு. அது அந்நாட்டின் குடிமக்களுக்காக மட்டுமே வழங்கப்படும் உரிமைகள், அதை மற்றவர் அனுபவிக்க முடியாது. உதாரணமாக இந்திய அரசியலமைப்பு இந்தியர்களுக்கு என்று சில சிறப்பு உரிமைகளை வழங்குகிறது. அவை சட்டப்பிரிவு 15(பாகுபாடு இல்லாமை),  சட்டப்பிரிவு 16(சமவாய...

நம்மால் ஏன் எலெக்ட்ரானை பார்க்க முடியாது ?

Image
மி க அதிகமாக யோசிக்கும் பழக்கம் எனக்கு உள்ளது, டாக்டர் ஸ்ட்ரேஞ் உடன் போட்டிபோடும் அளவுக்கு ஒரே பிரச்சினைக்கு பல்வேறு முடிவுகளை கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் உண்டு. அப்படி கடந்த வாரம் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏன் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டும் நம்மால் எலெக்ட்ரானையோ அல்லது புரோட்டானையோ பார்க்க முடியவில்லை ? என்ற எண்ணம் தோன்றிவிட்டது. தூங்க போகும் போது தான் இந்த எண்ணம்  வர வேண்டுமா என்று கடுப்பாகி யோசிக்க ஆரம்பித்தேன், இருக்கவே இருக்கிறார் நம் அண்ணண் chatgpt, அண்ணனையும் அர்த்த ராத்திரியில் எழுப்பி கேள்வியை தட்டி விட்டேன், chatgpt அண்ணணோ Heisenberg uncertainty principle என்ற இடத்தில் வந்து நின்றார். Heisenberg uncertainty principle என்றால் என்ன என்பதை பார்பதற்கு முன்பு சில அடிப்படைகளை தெரிந்து கொள்வோம். இல்லையென்றால் இந்த கட்டுரையே புரியாமல் போகலாம்...... ஃபோட்டான் மகிமை நாம் எப்படி பார்க்கிறோம் என்று கேட்டால் "கண்ணால்" என்று மொக்கை ஜோக்ஸ் அடிப்பவர்கள் தான் நிறைய பேர். ஆனால் உண்மையில் நாம் எப்படி பார்க்கிறோம் என்ற அறிவியலை யாரும் புரிந்துக் கொள்ள முற்படுவதில்...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 7

Image
7 நான்கு சம்பவங்கள்:  1) 2014ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி, தெலுங்கானா இந்தியாவின் 28வது மாநிலமாக உதயமானது.  2) 2019 சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. 3) ஜனவரி 26, 2020இல் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியும், டாமன் மற்றும் தையு என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. 4) கடைசி சம்பவம் கடந்த வருடம் நடந்த ஜி 20 மாநாட்டில் "இந்தியாவின் பிரதமர்" என்று அழைப்பதற்கு பதிலாக "பாரதத்தின் பிரதமர்" என்று அழைக்கப்பட்டது. இதெல்லாம் எப்படி நடைபெற்றது யார் அதிகாரம் கொடுத்தார்கள் போன்ற விஷயங்களை தான் இந்த அத்தியாயத்தில் பார்க்க போகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்றிலிருந்து நான்கு வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் நிலவரையறை பற்றி கூறுகிறது. சட்டப்பிரிவு 1: " இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்"  இந்த சொல்லாடல் மிகவும் முக்கியம். காரணம் ஒன்றியம்(Union) என்பதற்கும் கூட்டாட்சி(Federation) என்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்திய ஒன்றியத்தில் இருந்து எந்த மாநிலங்களும் பிரிந்து செல்ல இயலாத...