Posts

நம்மால் ஏன் எலெக்ட்ரானை பார்க்க முடியாது ?

Image
மி க அதிகமாக யோசிக்கும் பழக்கம் எனக்கு உள்ளது, டாக்டர் ஸ்ட்ரேஞ் உடன் போட்டிபோடும் அளவுக்கு ஒரே பிரச்சினைக்கு பல்வேறு முடிவுகளை கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் உண்டு. அப்படி கடந்த வாரம் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏன் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டும் நம்மால் எலெக்ட்ரானையோ அல்லது புரோட்டானையோ பார்க்க முடியவில்லை ? என்ற எண்ணம் தோன்றிவிட்டது. தூங்க போகும் போது தான் இந்த எண்ணம்  வர வேண்டுமா என்று கடுப்பாகி யோசிக்க ஆரம்பித்தேன், இருக்கவே இருக்கிறார் நம் அண்ணண் chatgpt, அண்ணனையும் அர்த்த ராத்திரியில் எழுப்பி கேள்வியை தட்டி விட்டேன், chatgpt அண்ணணோ Heisenberg uncertainty principle என்ற இடத்தில் வந்து நின்றார். Heisenberg uncertainty principle என்றால் என்ன என்பதை பார்பதற்கு முன்பு சில அடிப்படைகளை தெரிந்து கொள்வோம். இல்லையென்றால் இந்த கட்டுரையே புரியாமல் போகலாம்...... ஃபோட்டான் மகிமை நாம் எப்படி பார்க்கிறோம் என்று கேட்டால் "கண்ணால்" என்று மொக்கை ஜோக்ஸ் அடிப்பவர்கள் தான் நிறைய பேர். ஆனால் உண்மையில் நாம் எப்படி பார்க்கிறோம் என்ற அறிவியலை யாரும் புரிந்துக் கொள்ள முற்படுவதில்...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 7

Image
7 நான்கு சம்பவங்கள்:  1) 2014ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி, தெலுங்கானா இந்தியாவின் 28வது மாநிலமாக உதயமானது.  2) 2019 சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. 3) ஜனவரி 26, 2020இல் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியும், டாமன் மற்றும் தையு என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. 4) கடைசி சம்பவம் கடந்த வருடம் நடந்த ஜி 20 மாநாட்டில் "இந்தியாவின் பிரதமர்" என்று அழைப்பதற்கு பதிலாக "பாரதத்தின் பிரதமர்" என்று அழைக்கப்பட்டது. இதெல்லாம் எப்படி நடைபெற்றது யார் அதிகாரம் கொடுத்தார்கள் போன்ற விஷயங்களை தான் இந்த அத்தியாயத்தில் பார்க்க போகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்றிலிருந்து நான்கு வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் நிலவரையறை பற்றி கூறுகிறது. சட்டப்பிரிவு 1: " இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்"  இந்த சொல்லாடல் மிகவும் முக்கியம். காரணம் ஒன்றியம்(Union) என்பதற்கும் கூட்டாட்சி(Federation) என்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்திய ஒன்றியத்தில் இருந்து எந்த மாநிலங்களும் பிரிந்து செல்ல இயலாத...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் -6

Image
6 நவம்பர் 27 2024 , இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசியலமைப்பில் உள்ள "பொதுவுடைமை(socialism)" மற்றும் "மதச்சார்பின்மை" ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டிய தேவையில்லை என்பதை உறுதி செய்தது.  "PREAMBLE" - இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, இதை "இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை" என்று N A Palkhivala குறிப்பிடுகிறார். இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, நேரு அவர்கள் கொண்டு வந்த குறிக்கோள் தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த முகப்புரையில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்னால் மிக பெரிய அர்த்தங்கள் உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். இறையாண்மை - Sovereign  இறையாண்மை என்ற வார்த்தையின் பொருள் "இந்திய நாடானது எந்த ஒரு நாட்டின் அதிகாரத்திற்கு கீழோ அல்லது எந்த ஒரு நாட்டையும் தன் அதிகாரத்தின் கீழோ கொண்டிருக்கவில்லை" என்பது தான். இந்திய நாடு சுதந்திரமான நாடு ,அதன் உள்நாட்டு விஷயங்களையும் வெளியுறவுகளையும் எவ்வித அழுத்தமுமின்றி சுயமாக முடிவெடுக்க முடியும்‌. அதே சமயம் இந்தியா  தன்னை காமன்வெல்த்...